அனுபவம்தான் வாழ்க்கை

அடி தந்த பக்குவம்


அடி ஒன்று முதலில் விழ
அலறித் துடித்தேன்
அடி இரண்டு அடுத்து விழ
ஐயோவென்றேன் நோவினால்
அடிக்குஅடி மேலும் விழ
அழுதழுது கதறினேன்
அடி அடுத்தடுத்து கூடி விழ
ஆருமே வரவில்லை
அடி பட்ட புண்நோவால் அழுது
ஆண்டவனையும் கூப்பிட்டேன்
அடி நோவால் அடியெடுக்க முடியாமல்
அனாதையாக் கிடந்தேன்
அடி என்னை அடிக்க அடிக்க
அடி தாங்கியாகிவிட்டேன்
அடி யிப்போ இடியாக விழுந்தாலும்
அச்சமின்றி இருக்கின்றேன்
அடி தந்த பக்குவத்தை நான்
ஆரிடம்போய்ச் சொல்லுவேன்?

எழுதியவர்: செல்லி

வாழ்க்கை ஒரு போராட்டம். கவலையில்லா மனிதனில்லை. துன்பமில்லாத வாழ்க்கையில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவொருவித துன்பம். சிலரது வாழ்வில் ஆரம்ப காலத்தில் துன்பம்; ஒரு சிலருக்கு பிற்காலத்தில் துன்பம்; இன்னும் சிலருக்கு வாழ்க்கை முழுவதுமே தொடர்ந்து துன்பம்தான். துன்பம் அனுபவிக்கும்போது அந்த அனுபவத்தில் மனித மனம் பக்குவமடைகிறது. அதைத்தான் இக் கவிதை காட்டுகிறது.
_____________________________________________________________________________
நீங்களும் இந்தக் கவிதையைப் படித்து உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்




"அனுபவம்தான் வாழ்க்கை"
13 Comments - Show Original Post Collapse comments

Blogger செல்லி said...

மன்னிக்கவும்,அனுபவம் என்பதற்குப் பதிலாக அநுபவம் என்று எழுதிவிட்டேன்.

12/28/06 3:45 AM
Delete
Blogger Soorya said...

அடி கவிதை நல்லாக வந்திருக்கிறது.
நிறையு வாசிப்பதன் மூலமும் எழுதுவதின் மூலமும் மேலும் உங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.
வாழ்த்துகள்.

12/29/06 3:39 AM
Delete
Blogger பகீ said...

வாருங்கள் செல்லி. தமிழ் பதிவுலகிற்கு.

edit post இல் சென்று மாற்றி விடுங்களேன்.

ஊரோடி பகீ

12/29/06 8:38 AM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் சூரியா
இந்தக் கன்னிப் பதிவுக்கு முதலில் வந்த உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. மீண்டும் வாருங்கள்.

12/29/06 1:55 PM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் பகீ
இந்தக் கன்னிப் பதிவை முதன்முதலில் வரவேற்று பின்னூட்டம் அளித்திருக்கீறீர்கள். நன்றி.
ஆமாம், edit post க்குப் போய் சில பிழைகள் திருத்தியிருக்கிறேன்.ஆலோசனைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள். ஆலோசனை தாருங்கள்.

12/29/06 2:04 PM
Delete
Blogger அரை பிளேடு said...

முதல்ல பதிவு எழுத வந்து இருக்கற உங்களை வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

கவிதை அருமை. வாழ்க்கையென்றால் அடிகள் கட்டாயம் இருக்கும். அதை எப்படி நாம எதிர் கொள்ளறோம் அப்படின்றதுதான் முக்கியம்.

வெறுமனே அடங்கி அடிதாங்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுதல் தவறு. அடிகளை வெல்லும் பக்குவமே தேவை.

நிறைய எழுதுங்கள். கவிதைகள் வலியை மட்டுமன்றி வழியையும் சொல்லட்டும்.

12/29/06 3:42 PM
Delete
Anonymous செல்லி said...

உங்க பேரைச் சொல்ல நாக்கில் வெட்டு விழுகிறது, அதனால் வபிந (வலைப் பதிவு நண்பரே)என்று கூப்பிடுகிறேன்.
வபிந
நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை.அதாவாது அடி விழுந்து - துன்பத்தால்- விழுந்தாலும் உடனே எழுந்து விட வேண்டும்.துவண்டுவிடக் கூடாது.பின் வாழ்க்கையே தோற்றுவிடும்; துன்பம் எமை வென்றுவிடும்.
ஒவ்வொரு தடவையும் நீ விழும்போதும், அத்தனை வீழ்ச்சியிலிருந்தும் எப்படி நீ எழும்புகிறாய் என்பதில்த்தான்
உண்மையான் வெற்றி அடைகிறாய் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லுகிறார்.
அப்படி எத்தனை தடவை வென்றுவிட்டேன். அதனால்த்தான் வாழ்வில் என்னக்குப் பக்குவம் வந்துவிட்டது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. மீண்டும் வாங்க.

12/29/06 6:19 PM
Delete
Blogger நான் said...

வாருங்கள்,
பதிவுலகிற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்,

நல்ல கவிதை, நிறைய எழுதுங்கள், பகிர்ந்து கொள்வோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

12/30/06 1:05 AM
Delete
Blogger செல்லி said...

வாருங்க நான். வருகைக்கு நன்றி.உங்க இன்னொரு பின்னூட்ட்த்தையும் படித்து publish பண்னினேன் ஆனா அது இங்கு வரவில்லை. புது வீடில்லையா இன்னும் நிறைய பழக வேண்டியிருக்கு.
செல்லி எங்க அம்மாவோட செல்லப் பேருங்க.
உங்கள்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

12/30/06 4:10 AM
Delete
Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்ல கவிதை செல்லி!
நண்பர்கள் சொன்னது போல் பழகப் பழகப் பதிவுத் தமிழ் உங்க பக்கம் வந்து விடும்!

வாழ்த்துக்கள்!

12/30/06 9:30 PM
Delete
Blogger செல்லி said...

//நண்பர்கள் சொன்னது போல் பழகப் பழகப் பதிவுத் தமிழ் உங்க பக்கம் வந்து விடும்!//
ஆமாம் , நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.
உங்க கருத்துக்கு மிகவும் நன்றி.

12/30/06 11:13 PM
Delete
Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

அடிமேல் அடி விழுந்தாலும் அடிமேல் அடி வைத்து வழ்க்கையில் முன்னே அடி எடுத்து வைக்கவேண்டும்.
அருமையாண கவிதை. த்ங்களுக்கு கர்னாடக சங்கீதம் பிடித்தால் என் வலைப்பதிவுக்கு வாருங்கள்

12/31/06 11:34 AM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் தி.ரா.ச
கருத்துகளுக்கு மிக்க ந்ன்றி

//தங்களுக்கு கர்னாடக சங்கீதம் பிடித்தால் என் வலைப்பதிவுக்கு வாருங்கள்//
நிச்சயம் வருகிறேன்

12/31/06 10:17 PM
Delete

One response to “அனுபவம்தான் வாழ்க்கை”

Rajaraman said...

அற்புதம் ......