வெள்ளைக் கத்தரிக்காய்

பிறிஸ்பேனில் இந்தக் கத்தரிக்காய் அருமையாகக் கிடைக்கிறது. இது காஸ்பர் (Casper)என்ற இனமாகும்.


இந்தப் பதிவை internet Explorer இல் பாருங்கள் . வீடியோவில் பார்க்கலாம்.
Fire fox இல் வீடியோ தெரியாது; பார்க்க முடியாது.

இந்தக் கத்தரிக்காயைப் பார்க்கும்போது எனக்கு மட்டுவில் வெள்ளைக் குண்டுக் கத்தரிக்காய்தான் நினைவுக்கு வருகிறது.இந்த இனத்தை கோஸ்ற்பஸ்ரர்(Ghostbuster) எனப்படுகிறது.இந்த மட்டுவில்க் கத்தரிக்காய் கறியை பூநகரி மொட்டைக் கறுப்பன் புழுங்கலரிசிச் சோற்றுடன் திண்டால் அப்பிடி ஒரு தனி ருசி!

அனுபவம்தான் வாழ்க்கை

அடி தந்த பக்குவம்


அடி ஒன்று முதலில் விழ
அலறித் துடித்தேன்
அடி இரண்டு அடுத்து விழ
ஐயோவென்றேன் நோவினால்
அடிக்குஅடி மேலும் விழ
அழுதழுது கதறினேன்
அடி அடுத்தடுத்து கூடி விழ
ஆருமே வரவில்லை
அடி பட்ட புண்நோவால் அழுது
ஆண்டவனையும் கூப்பிட்டேன்
அடி நோவால் அடியெடுக்க முடியாமல்
அனாதையாக் கிடந்தேன்
அடி என்னை அடிக்க அடிக்க
அடி தாங்கியாகிவிட்டேன்
அடி யிப்போ இடியாக விழுந்தாலும்
அச்சமின்றி இருக்கின்றேன்
அடி தந்த பக்குவத்தை நான்
ஆரிடம்போய்ச் சொல்லுவேன்?

எழுதியவர்: செல்லி

வாழ்க்கை ஒரு போராட்டம். கவலையில்லா மனிதனில்லை. துன்பமில்லாத வாழ்க்கையில்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒவொருவித துன்பம். சிலரது வாழ்வில் ஆரம்ப காலத்தில் துன்பம்; ஒரு சிலருக்கு பிற்காலத்தில் துன்பம்; இன்னும் சிலருக்கு வாழ்க்கை முழுவதுமே தொடர்ந்து துன்பம்தான். துன்பம் அனுபவிக்கும்போது அந்த அனுபவத்தில் மனித மனம் பக்குவமடைகிறது. அதைத்தான் இக் கவிதை காட்டுகிறது.
_____________________________________________________________________________
நீங்களும் இந்தக் கவிதையைப் படித்து உங்கள் கருத்தையும் சொல்லுங்களேன்




"அனுபவம்தான் வாழ்க்கை"
13 Comments - Show Original Post Collapse comments

Blogger செல்லி said...

மன்னிக்கவும்,அனுபவம் என்பதற்குப் பதிலாக அநுபவம் என்று எழுதிவிட்டேன்.

12/28/06 3:45 AM
Delete
Blogger Soorya said...

அடி கவிதை நல்லாக வந்திருக்கிறது.
நிறையு வாசிப்பதன் மூலமும் எழுதுவதின் மூலமும் மேலும் உங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள முடியும்.
வாழ்த்துகள்.

12/29/06 3:39 AM
Delete
Blogger பகீ said...

வாருங்கள் செல்லி. தமிழ் பதிவுலகிற்கு.

edit post இல் சென்று மாற்றி விடுங்களேன்.

ஊரோடி பகீ

12/29/06 8:38 AM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் சூரியா
இந்தக் கன்னிப் பதிவுக்கு முதலில் வந்த உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி. மீண்டும் வாருங்கள்.

12/29/06 1:55 PM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் பகீ
இந்தக் கன்னிப் பதிவை முதன்முதலில் வரவேற்று பின்னூட்டம் அளித்திருக்கீறீர்கள். நன்றி.
ஆமாம், edit post க்குப் போய் சில பிழைகள் திருத்தியிருக்கிறேன்.ஆலோசனைக்கு நன்றி.மீண்டும் வாருங்கள். ஆலோசனை தாருங்கள்.

12/29/06 2:04 PM
Delete
Blogger அரை பிளேடு said...

முதல்ல பதிவு எழுத வந்து இருக்கற உங்களை வரவேற்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.

கவிதை அருமை. வாழ்க்கையென்றால் அடிகள் கட்டாயம் இருக்கும். அதை எப்படி நாம எதிர் கொள்ளறோம் அப்படின்றதுதான் முக்கியம்.

வெறுமனே அடங்கி அடிதாங்கும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுதல் தவறு. அடிகளை வெல்லும் பக்குவமே தேவை.

நிறைய எழுதுங்கள். கவிதைகள் வலியை மட்டுமன்றி வழியையும் சொல்லட்டும்.

12/29/06 3:42 PM
Delete
Anonymous செல்லி said...

உங்க பேரைச் சொல்ல நாக்கில் வெட்டு விழுகிறது, அதனால் வபிந (வலைப் பதிவு நண்பரே)என்று கூப்பிடுகிறேன்.
வபிந
நீங்க சொல்லுவது முற்றிலும் உண்மை.அதாவாது அடி விழுந்து - துன்பத்தால்- விழுந்தாலும் உடனே எழுந்து விட வேண்டும்.துவண்டுவிடக் கூடாது.பின் வாழ்க்கையே தோற்றுவிடும்; துன்பம் எமை வென்றுவிடும்.
ஒவ்வொரு தடவையும் நீ விழும்போதும், அத்தனை வீழ்ச்சியிலிருந்தும் எப்படி நீ எழும்புகிறாய் என்பதில்த்தான்
உண்மையான் வெற்றி அடைகிறாய் என்று யாரோ ஒரு அறிஞர் சொல்லுகிறார்.
அப்படி எத்தனை தடவை வென்றுவிட்டேன். அதனால்த்தான் வாழ்வில் என்னக்குப் பக்குவம் வந்துவிட்டது உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. மீண்டும் வாங்க.

12/29/06 6:19 PM
Delete
Blogger நான் said...

வாருங்கள்,
பதிவுலகிற்கு வந்ததற்கு வாழ்த்துக்கள்,

நல்ல கவிதை, நிறைய எழுதுங்கள், பகிர்ந்து கொள்வோம்.

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

12/30/06 1:05 AM
Delete
Blogger செல்லி said...

வாருங்க நான். வருகைக்கு நன்றி.உங்க இன்னொரு பின்னூட்ட்த்தையும் படித்து publish பண்னினேன் ஆனா அது இங்கு வரவில்லை. புது வீடில்லையா இன்னும் நிறைய பழக வேண்டியிருக்கு.
செல்லி எங்க அம்மாவோட செல்லப் பேருங்க.
உங்கள்க்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

12/30/06 4:10 AM
Delete
Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

நல்ல கவிதை செல்லி!
நண்பர்கள் சொன்னது போல் பழகப் பழகப் பதிவுத் தமிழ் உங்க பக்கம் வந்து விடும்!

வாழ்த்துக்கள்!

12/30/06 9:30 PM
Delete
Blogger செல்லி said...

//நண்பர்கள் சொன்னது போல் பழகப் பழகப் பதிவுத் தமிழ் உங்க பக்கம் வந்து விடும்!//
ஆமாம் , நானும் அப்படித் தான் நினைக்கிறேன்.
உங்க கருத்துக்கு மிகவும் நன்றி.

12/30/06 11:13 PM
Delete
Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

அடிமேல் அடி விழுந்தாலும் அடிமேல் அடி வைத்து வழ்க்கையில் முன்னே அடி எடுத்து வைக்கவேண்டும்.
அருமையாண கவிதை. த்ங்களுக்கு கர்னாடக சங்கீதம் பிடித்தால் என் வலைப்பதிவுக்கு வாருங்கள்

12/31/06 11:34 AM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் தி.ரா.ச
கருத்துகளுக்கு மிக்க ந்ன்றி

//தங்களுக்கு கர்னாடக சங்கீதம் பிடித்தால் என் வலைப்பதிவுக்கு வாருங்கள்//
நிச்சயம் வருகிறேன்

12/31/06 10:17 PM
Delete

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

ஆர் ஆருக்கு எல்லாம் வாழ்த்துச் சொல்லவேணும் எண்டு யோசித்துப் பாத்திட்டு ஒரு பேர்ப் பட்டியல் போட்டிருக்ககேன்
முதலில் தமிழ்மண நிர்வாகிகட்கும்
செந்தழல்ரவி *(எதிராக) சிந்தாநதி
கானாபிரபா மலைநாடான் கொழுவி
சயந்தன், வசந்தன், சிநேகிதி
கீதா,வல்லிசிம்ஹன் துளசி
மாசிலா,குமரன் ,தி.ரா.சா
துர்க்கா, மழைஷ்ரேயா தூயா
நா.கண்ணன் கண்ணபிரான்
கோவிகண்ணன் இ. கொத்தனார்
யோசிப்பவர் யோகன் பாரிஸ்
சீனா ஜீவா காரூரன் சிறில் அலெக்ஸ்
வி.ஜே. சின்னக்குட்டிவெற்றி
எஸ்.வி.சுப்பையா ஞானவெட்டி
எல்லோருக்கும் நல் தீபாவளி வாழ்த்துக்கள்!
(செந்தழல்ரவி (எதிராக) சிந்தாநதி என்பதன் விளக்கம்: செந்தழல் என்றால் நெருப்பு அதற்கெதிராக சிந்தா நதி என்றால் தண்ணி . அதனால்த்தான் (எதிராக) என்று போட்டிருக்கிறேன். மற்றபடி தப்பாக ஏதும் நினைத்து விடாதீர்கள்.)



14 Comments - Show Original Post Collapse comments

Blogger பாரதிய நவீன இளவரசன் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்!

11/7/07 9:35 AM
Delete
Blogger செல்லி said...

பாரதிய நவீன இளவரசன்
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக நன்றி

11/7/07 1:42 PM
Delete
Blogger கானா பிரபா said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

11/7/07 3:22 PM
Delete
Blogger செல்லி said...

உங்க வாழ்த்துகளைப் பாடித்ததும் மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி பிரபா.

உங்க குடும்பத்தினருக்கும் என் இனிய நல் தீபாவளி வாழ்த்துகள்!

11/7/07 7:43 PM
Delete
Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

அன்புத்தங்கை செல்விக்கும் அவர்தம் குடும்பத்துக்கும்இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

11/8/07 1:10 AM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் தி.ரா.சா சார்

என்கே வந்து வாழ்த்தாம போயிடுவீங்களோன்னு நினைச்சேன்...........
வந்து வாழ்த்திட்டீங்க அது போதும்!, ரொம்ப நன்றி, சார்.
மீண்டும்
தங்கமணி அம்மாவுக்கும் உங்களுக்கும், உங்க குடும்பதவர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

11/8/07 2:33 AM
Delete
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

செல்லி!
தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

11/8/07 3:42 AM
Delete
Blogger குமரன் (Kumaran) said...

வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி செல்லி. உங்களுக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்.

11/8/07 1:52 PM
Delete
Blogger செல்லி said...

யோகன், குமரன்
உங்க வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

11/8/07 9:33 PM
Delete
Blogger நானானி said...

செல்லி!
உங்கள் லிஸ்டில் நான் இல்லை. இருந்தும் என் பதிவிற்கு வந்து வாழ்த்தியதற்கு நன்றி! உங்களுக்கும் உங்கள் குடும்பதாருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

11/9/07 9:54 AM
Delete
Blogger செல்லி said...

வாங்க நளாயினி, நன்றி

லிஸ்ரில இருக்கிறவங்களில் 4 -5 பேரைத்தவிர மற்றவர்கள் எஅன் பதிவுகளுக்கு முன்பு பின்னூட்டமிட்டவர்கள்
இன்னும் சிலரின் பேரையும் போட மறந்துவிட்டேன்
லிஸ்ரில இல்லாட்டி என்ன வாழ்த்திவிட்டீங்க , அது போதுமில்லியா.:-)

11/9/07 3:49 PM
Delete
Blogger வி. ஜெ. சந்திரன் said...

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

11/9/07 3:54 PM
Delete
Blogger cheena (சீனா) said...

அட - லிஸ்ட்லே என் பேரும் இருக்கு
செல்லி, இனிய இதயங்கலந்த தீபத் திருநாள் நல் வாழ்த்துகள். ( லேட்டா சொன்னாலும் லேட்டஸ்டா சோலுவேன்)

11/9/07 5:12 PM
Delete
Blogger செல்லி said...

வாங்க வி.ஜே, சீனா
உங்களை நன்றி மறவாம வாழ்த்தியிருக்கிறன்.

நீங்களும் பதிலுக்கு வந்து வாழ்த்திமகிழ்வித்தமைக்கு நன்றி

11/9/07 5:41 PM
Delete

கண்ணாமூச்சி ஏனடா & மீற் த பேரன்ஸ் (Meet the Parents ) ஒரு ஒப்பீடு்



கண்ணாமூச்சி ஏனடா என்ற படம் மீற் த பேரன்ஸை தழுவியதாக உள்ளது.
மீற் த பேரன்ஸை Jay Roach இயக்கத்தில் Robert De Niro,Ben Stiller , Teri Polo, Blythe Danner, Nicole Dehuff, Jon Abrahams ஆகியோர் நடித்த அமெரிக்க நகைச்சுவைத் திரைப்படம்தான் "மீற் த பேரன்ஸ்" ( Meet the Parents)

இது 15மார்கழி 2000 த்தில் வெளிவந்தது. இரு படத்திலும் மகளின் காதல் தகப்பனின் கண்டிப்புக்கும் தாயின் தாராள மனதிற்கும் இடயில் ஊசலாடுகிறது. மேலும், மகளின் காதலனை ஏற்காமல் புறக்கணிக்கும் கண்டிப்பான தந்தை தாராள குணமிக்க தாய் போன்ற கதா பாத்திரங்கள், பெரியோர் காதல் இளையவர் காதல் என்பன இரு படத்திலுமே இடம்பெறுகின்றன. இரண்டுமே நகைச்சுவையான திரைப் படம்.

மீற் த பேரன்ஸில் கண்ணாமூச்சி ஏனடாவில்

பென் ஸ்ரில்லர்(Ben Stiller) பிருத்வி
ரொபெட் டி நிரோ (Robert De Niro) சத்தியராஜ்
ரெறி போலோ (Teri Polo) சந்தியா
ப்ளித் டனர் (Blythe Danner) ராதிகா

இப் படத்தில் மகளின் காதலனை(கிறேக்- Greg,)ஏற்றுக்கொள்ளாத கண்டிப்பான தகப்பனாக ரொபெட் டி நிரோ (Robert De Niro) குத்தல், குதர்க்கப் பேச்சுடன் பென் ஸ்ரில்லர்(Ben Stiller) ஐ வெறுத்து ஒதுக்கும் விதம் சிரிப்பில் பார்ப்போரை வயிறு குலுங்கச் செய்யும். திரைவசனங்களுக்கு ஏற்ற நகைச்சுவை நடிப்பு , வித்தியாசமான நகைச்சுவை பாத்திரத்திரங்கள் இப்படத்தின் வெற்றிக்கு பின்னணியாக இருக்கின்றன என்றால் தவறாகாதயில் த்ங்காமல், தன் வித்தியாசமான நகைச்சுவை பாத்திரத்தை உருவாக்க தன் பலத்தை பயன்படுத்தியிருக்கிறாடர் என்பது வெளிப்படைபெற்றிருக்கு. மகளின் காதல் தகப்பனின் கண்டிப்புக்கும் தாயின் தாராள மனதிற்கும் இடயில் ஊசலாடுகிறது.அதை எப்படி பெற்றாரின் காதலை வைத்து தன் டகாதலைவெற்றியாக்கும் நாயகன்.

கண்ணாமூச்சி ஏனடா
கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக சத்யராஜ் தாராள குணமிக்க அன்பு மனைவி ராதிகா. இவர்களின் மகள் சந்தியா.மலேஷியாவில் படித்துக் கொண்டிருக்கும்போது சந்தியா பிருத்விராஜை சந்திக்க நேர்கிறது. பிருத்வி சந்தியாவைக் கண்டதும் ஆரம்பத்திலேயே தன் தகப்பனைப் பத்திச் சொல்லி பயமுறுத்துறார்."எங்க அப்பாகிட்டமட்டும் நீ மாட்டினே, தோலை உரிச்சிடுவாரு", "சென்னையில ஆறுமுகம்னு கேட்டுப்பாரு"மிக கண்டிப்பானவர் என்கிறதை தெரியப்படுத்தப்படுகிறது. யாரோ ஒருத்தனோட மகளின் காதலை வெறுக்கும் அப்பா அக்காதலை ஒதுக்கபிருத்விராஜை போலீஸ் கரவுப் புத்திடயோடு புறக்கணிக்கும் ஒவ்வொரு செயலும் வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது. ஆனால் இந்த முயற்சி அவரது மனைவி அவரை விட்டுப் பிரிந்தவுடன் தோற்றுவிடுகிறது.ஆனால் பிருத்வி தன் காதல் தோற்றாலும் காதலியின் பெற்றோரை இணைத்து வைக்க முயன்று , மாமனார் மனதில் டபிள் ஓகே ஆகிவிட்டார்- இதுதான் கதைச் சுருக்கம்.சத்டியராஜின் நக்கல் நடிப்பும், வில்லன் தன்மையும் கண்டிப்பான சுபாவமுள்ள இந்தப் பாத்திரத்திற்கு பொருந்துகிறது.. பிருத்வி சத்யராஜின் தந்திரங்களுக்கு ஈடுகொடுத்தும், யதார்த்தமான சூழ்நிலைகளில் இயல்பாகவும் நடித்துச் சிறப்பிக்கிறார். இதில் அரிவாள் வெட்டு, இரத்த களரி, ஆபாசம் ஏதுமில்லாம இருப்பது மெச்சத்தக்கது. குடும்பத்தோட சேர்ந்து பாக்கக் கூடியதாக இருக்கிறது.
படங்கள் நன்றி:
கூகிள் இமேஜ்
cinesnacks