விளையாட்டு ரசிகர்களுக்காக ....உதைபந்தாட்டம் . பார்த்துச் சிரிங்க

This summary is not available. Please click here to view the post.

நவராத்திரி அனுபவம்

நவராத்திரி விழா
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் நவராத்திரி விரதம் மிகவும் முக்கியமானது. நவராத்திரி சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரியும் (நவம் என்பது ஒன்பது)இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த ஒன்பது நாளும் விரமிருந்து கொண்டாடுர். புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது இந்த நவராத்திரி விழா.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.அதற்கடுத்த மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு. பத்தாம் நாளான விஐய தசமி அன்று புதிய வித்தைகள், கலை,கல்வி கற்பதைத் தொடங்குவார்கள்.

வீட்டில், பள்ளிக்கூடத்தில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரியைத் தவிர வேறு விரத விழாவும் இல்லை என்றே சொல்லலாம்.யாழ்ப்பாணத்தில் நாம் இதனைக் கொண்டாடும்போது தமிழ்நாட்டில் நடப்பது போன்று கொலு எதுவும் வைப்பதில்லை.முதல் நாளன்று தலை வாழை இலை ஒன்றின் மேல் மண்ணை ஈரமாக்கி நவதானியங்களைக் கலந்து, அந்த மண்ணின் மேல் கும்பத்தை வைத்துக் கொள்வோம்.அந்தக் கும்பத்திற்கு சந்தனம் குங்குமம் இட்டுக் கொள்வோம்.அந்த வாழை இலையில் வெற்றிலை பாக்கு வாழைப் பழம் பத்து நாளும் புதிதாக வைப்போம். ஒவ்வொரு நாள் இரவும் சக்கரைப் பொங்கல், வெண் பொங்கல்,அவல், சுண்டல், பழங்கள் இவற்றில் ஏதாவது பிரசாதமாக படைத்து, குடுபத்தவர் ஒன்றுகூடி, பசனைகள் பாடி சக்தியை வழிபடுவோம்.

படிக்கின்ற மாணவர்கள் கட்டாயமாக விரதமிருந்து நவராத்திரி வழிபாட்டைச் செய்வேண்டும் என்பது பரவலான எதிர்பார்ப்பாகும்.ஒன்பதாம் நாள் வீட்டுக்கு கடைசி நாள்.பள்ளிக்கூடத்தில் படிக்கிற புத்தகங்கள் எல்லாம் கும்பத்திற்கு முன்னாலே வைப்போம். அதனால் நிறையப் பிரசாதங்கள் செய்து படைப்போம். பின் அவற்றை அண்டை அயலவருக்கும் கொடுத்து உண்பதிலும் ஒரு தனி இன்பமே.இவற்றில் அவல்,சுண்டல்க்கடலை இவற்றுக்குத் தான் பலரும் ஆசைப்படுவர். ஏனென்றால் இவை இரண்டையும் யாழ்ப்பணத்தில் நவராத்திரி நாட்களித்தான் காணலம்.
பத்தாம் நாள் வீட்டில் வழிபட்டபின் அந்த நவதானிய முளைகளைப் பிடுங்கி புத்தகங்களில் வைப்போம். கல்வி நிறைய வருமாம் என்று ஒரு நம்பிக்கை. ஒவ்வொரு வருட நவராத்திரியும் எனக்கு அந்தக் காலத்தில் நாம் வீட்டிலும், பள்ளிக்கூடத்திலும் எப்படியெல்லாம் குதூகலமாக கொண்டாடினோம் என்பதை நினைவு படுத்தும்.அங்கு அப்போதெல்லாம் பலரிடம்ஆன்மீக அனுபவத்தைக் காட்டிலும் ஒரு வித கொண்டாட்டக் களிப்புத் தான் அதிகம் மேலோங்கி இருந்தது என்பது என் கருத்தாகும். இந்த அனுபவம் வீட்டுக்கு வீடு வேறுபடக் கூடும்.

பள்ளிக்கூடத்தில் ஒரு மண்டபத்தில் மேசை ஒன்றின் மேல் கும்பத்தை வைத்து,ஒன்பது நாளும் காலை எல்லா வகுப்பினரும் ஒன்றுகூடி பசனைகள் பாடித் துதிப்போம்.ஒன்பதாம் நாள் பசனைகள் முடிந்ததும் பாட்டு, நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் இடம்பெறும்.கடைசி நாளான விசயதசமி அன்றுதான் பிரசாதங்கள் நிறையச் செய்து படைக்கப்படும்.பன்னிரண்டாம் வகுப்பு மணவர்கள்தான் இதற்கான ஒழுங்குகளை சில ஆசிரியர்களின் உதவியுடன் செய்வார்கள். இந்தப் பத்து நாளும் திரும்மத்திரும்ப சலகலாவல்லி மாலையைப் பாடிப்பாடி அது மனப்பாடமாகவெ வந்துவிடும்.

வீட்டில் இந்த விழா கொண்டாடப்படுமபோது வீடு கோயிலைப் போல களை கட்டிவிடும் என்று கூட சொல்லாம்.

அனோனிகளின் அநியாயம், ஆனால் எனக்கது உற்சாகம்

இன்று நான் இட்ட் பதிவுக்கு மோசமான அனானியின் பின்னூட்டங் காரணமாக அப் பதிவை delete செய்திருக்கிறேன் என்பதை அன்போடு அதற்க்குப் பின்னூட்டமிட்ட எல்லோருக்கும் மன வருத்தத்துடன் அறியத் தருகிறேன்
பெண் பதிவர்களை இவர்களுக்குப் பிடிக்காதோ?
இதற்காக பதிவே இனிப் போடமாட்டேன் என்று மட்டும் அனோனிகளே எண்ணவேண்டாம். உங்களின் கீழ்த்தரமான செயல் மேலும் மேலும் என்னை எழுதத் தூண்டுகிறது என்பதையும் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒரு விதத்தில் பார்த்தால் என்னை உற்சாகப் படுத்திவிட்டீர்கள் என்றே சொல்வேன். அதற்கு மிக நன்றி