தற்காலிகப் பாசம்


மனிதநேயம் அவரவர் மனதிலிருந்து வரவேண்டும்



போட்டோ , வீடியோ எடுப்பதற்கு Eye-Fi card இன் நன்மைகள்





Eye-Fi card ஐ உங்கள் டிஜிடல் கமராவிற்கு போட்டு படம்,வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே உங்கட கண்ணணியில் அவற்றை upload செய்யலாம்.

இதற்கு உங்களுக்குத் தேவை

1. டிஜிற்ரல் கமரா
2. Eye-Fi memory card இதுவும் ஒரு wireless memory card
3. வீட்டு Wi-Fi network ( wireless network)

வீட்டுக்கு 25 மீற்றர் தூரத்தில் எடுக்கும் போட்டோ அல்லது வீடியோக்களை இவ்வாறு upload செய்யலாம்

தூர இடங்களுக்குச் சென்று அதாவது விடுமுறைக்கு சென்று உங்கள் கமராவில் எடுக்கும் போட்டோ அல்லது வீடியோக்களை உங்கள் Eye-Fi card உங்களது iPhone, iPad, or Android க்கு நேரடியாக மாற்றும் வசதிகொண்டது.

இனிமேல், கமராவில memory card நிரம்பிவிட்டுது எண்ட பிரச்சனைக்கே இடமில்லை.என்ன யோசனை? சுற்றுலா போங்கோ எவ்வள போட்டோ அல்லது வீடியோவேண்டுமெண்டாலும் எடுங்கோ..........!


மேலும் விளங்கிக் கொள்ள இந்த வீடியோவைப் கிளிக்குங்கோ!!






நன்றி : www.eye-fi

வேளைக்கு எழும்புது ஏன் முக்கியமானது? வாசித்துப் பாருங்கள். .

"வேளைக்கு எழும்பும் உங்களது பழக்கம் என்பது உங்களுக்கு நீங்களே கொடுக்கும் ஒரு கொடை" எனலாம்.அதிகாலை நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்பார்கள். அந்த நேரத்தில் நல்ல சிந்தனைகள் மனதில் ஏற்படும்; யோகா போன்ற உடற்பயிற்சி, தியானப் பயிற்சி செய்ய ஏற்ற நேரமாகும்.இந்தக் காலத்தில் தொலைக்காட்சி , இணையம் என இரவுநேரங்களில் நீண்டநேரம் செலவழிப்பதால் அநேகம்பேர் காலையில் தாமதமாகவே எழும்புகிறார்கள். இதனால் அவர்கள் பகலில் செய்யவேண்டிய வேலைகளை அவசரத்துடன் செய்வதால் வேலையின் தரமும் கெட்டு, தேவையில்லா சிக்கல்களிலும்,விபத்துகளிலும் மாட்டிக் கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு உள்ளாகிறார்கள். ஆனா வேளைக்கு எழும்புவதால அன்றய நாளில் நிறைய நேரம் இருக்கும். அதால அவரப்படவோ அந்தரப்படவோ வேண்டியிருக்காது. நிதானமாக, திறமையாக பயனுள்ள பல வேலகளைச் செய்யமுடியும்.

வேளைக்கு எழும்பும் பழக்கத்தை கோண்டு வருவதற்கு எங்களை நாம் அதற்குப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். நீண்ட நேர நித்திரையை விட 6 மணித்தியால ஆழ்ந்த தூக்கமே நல்லது. நித்திரை அடிக்கடி சிலருக்கு குழம்புவது உண்டு.
அதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கடைப்பிடிக்கும்படி றொபின் சர்மா சொல்கிறார்
• நித்திரை கொள்ள தயாராகும்போது அன்றய நாள் பகலில் நடந்தவைகளை அசைபோட வேண்டாம்.

•எட்டுமணிக்குப் பிறகு சாப்பிட வேண்டாம். விரும்பினால் சூப் குடிக்கலாம்.

• படுக்கைக்குப் போகுமுன் தொலைக் காட்சியில் செய்திகளைப் பார்ப்பததைத் தவிர்க்க வேண்டும்.

• படுக்கையில் இருந்துகொண்டு வாசிப்பது சிலரது வழக்கம். அதைத் தவிர்க்க வேண்டும்.

வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த தொடர்ச்சியான முயற்சியும், பயிற்சியும், எல்லாத்திற்கும் மேலாகப் பொறுமையும் தேவை. அதனால் வரப்போகும் நல்ல விளைவுகள் நமக்குப் பயனுள்ளவையாகவே இருக்கும்.

வேளைக்குப் படுத்து வேளைக்கு எழும்புங்கள்..!

கேட்டு மகிழ -12 காண ஆயிரம் கண் வேண்டும் -

சிட்னி முருகனுக்காக இந்தப் பாடற் பதிவு. பங்குனி உத்திரத்திற்கு முதல் நாள் அழகான அலங்காரத்துடன் தேர்க்கோலம் பூண்ட சிட்னி முருகன் அழகைக் காண ஆயிரம் கண் வேண்டும்.

இப் பாடலின் சரணத்தில் முருகனின் நாமங்களை நித்யசிறீ பாடும் அழகே தனி!இந்தப் பாடல் நித்யசிறீயின் குரலிலே கேட்கக் கேட்க தெவிட்டாதது.நீங்களும் கேட்டுப்பாருங்கள்.
ராகம்: பீம்பிளாஸ்,
தாளம்: ஆதி,
பாடல்: அருளவன்

நித்யசிறீ பாடியதைக் கேட்க

வீடியோவில் பார்க்க இதோ..







இதையும் கேளுங்க


சந்தணமும் ஜவ்வாதும் சேர்ந்து மணங்கமழ
பாலபிஷேகமுடன் வெற்றித் திருநீறணிந்து
தங்க ரதத் தேரினிலே பக்தர்படை சூழ்ந்துவர
வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் -முருகா..முருகா
வள்ளி தெய்வயானையுடன் காட்சி தரும் -உன்னழகை

காண ஆயிரம் கண் வேண்டும் உன்னைக்
காண ஆயிரம் கண் வேண்டும் முருகனைக்
காண ஆயிரம் கண் வேண்டும் முருகனைக்
காண கண் ஆயிரம் வேண்டும்

உலகளந்த வல்லவனை வண்ணமயில் வாகனனை
கணபதி சோதரனை தந்தை சுவாமி ஆனவனை (காண)

செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை
விண்ணகமும் மண்ணகமும் காத்து நிற்கும் அருளகனை(காண)
முருகனைக் காண குமரனைக் காண
கந்தனைக் காண வேலனைக் காண
குகனைக் காண கடம்பனைக் காண
ஆறு முகனைக் காண சரவணனைக் காண
சிவகுமரனைக் காண கார்த்திகேயனக் காண
சண்முகனைக் காண அழகனைக் காண
பாலனைக் காண மயில்வாகனனைக் காண
அழகனைக் காண வேலனைக் காண
பழனி வேலனைக் காண முருகா..முருகா


கே.ஜே.யேசுதாஸ் பாடியதைக் கேட்க.


நன்றி,படம்:sydneymurugan.org.au
______________________________________________________________________________________





"கேட்டு மகிழ -12 காண ஆயிரம் கண் வேண்டும் -"
8 Comments - Show Original Post Collapse comments

Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//செங்கதிரும் முழுமதியும் சேர்ந்தணிந்த சுந்தரனை//

செல்லி!
அருமையான பாடல் ;இந்த அடியும் அழகான அடி ;எனக்குப் பிடித்த நித்திய சிறி குரல்; என் இஸ்ட தெய்வம் முருகன் புகழ்...மணக்கும் பாடல்
நன்றி

4/12/07 2:43 AM
Delete
Blogger குமரன் (Kumaran) said...

தாங்கள் ஏன் முருகன் அருள் கூட்டுப் பதிவில் இணைந்து முருகன் பாடல்களை இடக்கூடாது? இணைவதில் தடையில்லை என்றால் நானோ சிபியோ அழைப்பை அனுப்புகிறோம்.

4/12/07 2:44 PM
Delete
Blogger செல்லி said...

யோகன்
முருகனை யாருக்குத் தான் பிடிக்காது!
அழகன்,அருளகன்,ஆறுமுகன் முருகனைக் கும்பிடுவோருக்கு அடுத்தடுத்து வரும் பகையெலாம்
கழுத்தறுந்து போய் மடியுமாம்!
வரவுக்கு நன்றி.

குமரன்
முருகன் அருள் கூட்டுப் பதிவில் இணையும்படி தி.ரா.ச. சாரும் முன்பு கேட்டிருந்தார்.
முதலில் பாட்டுகள் கொஞ்சம் சேர்த்துவிட்டு உங்களுக்கு அறிவிக்கிறேன்.
நன்றி

4/12/07 3:37 PM
Delete
Blogger தி. ரா. ச.(T.R.C.) said...

அருமையான பாடல் முருகன் என்றாலே அழகு. அவ்னைப்பற்றிய பாடலும் அழகுதான்.படத்தில் முருகன் எவ்வளவு அழகாக இருக்கிறான்.

"வேலவனே வேலவனே வெற்றி வடி வேலவனே
புள்ளி மயில் ஏறிடும் வள்ளி மணவாளனே.சொக்கத்தங்கம் தெய்வாணை சொக்கும் வடி வேலவனே"

4/13/07 11:32 AM
Delete
Blogger செல்லி said...

தி. ரா. ச.சார்


இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

//அருமையான பாடல் முருகன் என்றாலே அழகு. அவ்னைப்பற்றிய பாடலும் அழகுதான்.படத்தில் முருகன் எவ்வளவு அழகாக இருக்கிறான்.//

முருகு என்றால் அழகு.முருகன் என்றால் அழகன்.
உலகளந்த வல்லவன்: ஞானப்பழத்திற்காக உலகத்தை வலம் வந்தவன்
தந்தை சுவாமி ஆனவன்:
தந்தைகே குருவானவன்.பிரணவத்தின் பொருள் என்னவெண்று தன் தந்தைக்கே உபதேசித்தவன்.
மேலும், நித்தியச்றீயின் குரல் இனிமை எனக்கு மிகவும் பிடிக்கும். 6 கட்டை சுதியில் அவர் பாடும்போது கேட்க அருமையாக இருக்கும்.
வரவிற்கும் கருத்திற்கும் நன்றி

4/13/07 1:56 PM
Delete
Blogger வெற்றி said...

செல்லி,
நல்ல பாடல். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்களின் கனவுகள் யாவும் நனவாகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் ஆண்டாக இந்த ஆண்டு அமைய இறைவனை வணங்கி நிற்கிறேன்.

4/13/07 3:21 PM
Delete
Blogger செல்லி said...

உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி, வெற்றி

4/13/07 3:45 PM
Delete
Blogger Bharateeyamodernprince said...

ஆஹாஹா.. நல்லதொரு பாடல். நல்ல பதிவு. மிக்க நன்றி.

4/15/07 2:07 AM
Delete

திரைப்படங்களும் நோய்களும்

திரைப் படங்கள் ஒவ்வொன்றும் அந்த்ந்தக் காலத்திற்கேற்ற மாதிரியான திரைக் கதைகளோடு அமைவது வழ்மை. ஆயினும் கால அடிப்படையின்றி, சில திரைப் படங்களில் நோயை அடிப்படியாகக் கொண்ட கதையில் படங்கள் அமைந்திருக்கின்றன. கீழே காட்டப்பட்டுள்ளவற்றை இதற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம். இவை நான் பார்த்த படங்களிற் சில.
அன்னியன் (தமிழ்)
இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு Multiple personality disorder என்ற நோய்.



















வடக்கு நோக்கியாந்தரம்-Vaddakkunokkiyaantharam-(மலையாளம்)
இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு என்ன மன நோய் என்பது காட்டப்படவில்லை.படத்தின் முடிவில்கதாநாயகன் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்லப்படுவது ம்ட்டும் காட்டப்படுகிறது. நான் நினைகிறேன் இந்த் கதாநாயகனுக்கு பிடித்திருப்பது சிற்ஸ்பரேனியா -Schizophrenia- என்ற நோயாகத்தானிருக்கும். கதாநாயகனுக்கு திருமணம் நடக்கப் போகிறது வரப்போகும் மனைவி தன்னைவிட நிறமும் உயரமும் கூட இருக்கிறாள் என்பதால் அதே தாழ்வுமனப்பான்மை அவனை கவலையிலாழ்த்தி பல பல சந்தேகங்களுக்கு இடமளிக்கிறது. இறுதியாக இதுவே நோயினை தோற்றுவிக்கிறது.


வடக்கும் நாதன்- Vadakkumnathan -(மலையாளம்).
இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு Bipolar என்ற நோய்.திறமையுள்ள சமஸ்கிருத பேராசிரியராக மோகன்லால் நடிக்கிறார், இந்தக் கதை A Beautiful Mind என்ற ஹொலிவூட் ஆங்கிலப் படத்தின் சாயலை ஒத்திருக்கிறது. ஆனால் மலையாள சூழலுக்கேற்ப எடுக்கப் பட்டிருக்கிறது.




சாகம் -Sargam-(மலையாளம்).

இதில்நடித்தவர்கள்:விநீத், மனோஜ். கே.ஜெயன், ரம்பா.இந்தப் படம் 1992ல் வெளிவந்த ஹரிஹரனின் படம். இந்தப் படத்தில் கதாநாயகனின் நண்பனுக்கு Seizure என்ற நோய் உள்ளது, ஆனால் அவனுடைய முரட்டுக் குணத்துக்கும் இந்த நோய்க்கும் என்ன தொடர்போ தெரியவில்ல?



தன்மாந்தர -Thanmatra -(மலையாளம்). இதில் மோகன்லால், மீரா வாசுதேவன் நடிக்கிறார்கள்.
இந்தப் படத்தில் கதாநாயகன் மோகன்லாலுக்கு Alzheimer என்ற நோய்.

ஒரு அழகான மனம்- A Beautiful Mind - (ஆங்கிலம்) இதில் நடித்தவர்:Russell crowe. இந்தப் படத்தில் கதாநாயகனுக்கு Schizophrenia என்ற நோய். ஜோன் போப்ஸ் நாஷ் -John Forbes Nash ஆக நடிப்பவர்-Russell crowe-ஒரு கணித மேதை.இவர் பல வருடங்களாக இந்த நோயோடு எப்படிப் போராடி வெல்லுகிறார் என்பதோடு மட்டுமல்லாது நோபல் பரிசையும் தட்டிக்கொள்கிறார் என்பதுதான் கதை.
___________________________________________________________________________________
இதே கதையம்சமுள்ள இன்னும் பல புதிய பழைய படங்கள் இருக்கலாம். இப்படியான படங்களைப் பார்த்தவர்கள் உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன்.




"திரைப்படங்களும் நோய்களும்"
7 Comments - Show Original Post Collapse comments

Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

Dr.செல்லி, :-)
வித்தியாசமான தலைப்பைத் தேர்ந்தெடுத்து உள்ளீர்கள்!

தமிழ் சினிமாவின் ஆஸ்தான் நோய் = கேன்சர் (பயணங்கள் முடிவதில்லை, வாழ்வே மாயம்....)
அதை விடுத்து அண்மைக் காலங்களில் புதிய அறிமுகங்கள் தரத் தொடங்கியுள்ளன.

கஜினி, பிதாமகன், இதயத்தைத் திருடாதே போன்ற படங்களும் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்!

12/30/06 9:41 PM
Delete
Blogger செல்லி said...

ரவி
உங்க வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.
ஆமாம் நீங்க குறிப்பிட்டதுபோல் இப்படி நிறையப் படங்கள் இருக்கின்றன.
உங்க ஒவ்வொரு பதிவுகளையும் தவறாமல் வாசிக்கிறேன்.ஆனா எல்லாவற்றுக்கும் பின்னூட்டம் எழுத நேரம்தான் கம்மி.
வரப்போகும் இனிய புத்தாண்டில் எழுத்தாளர் உலகில் மேலும் பிரகாசிக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

12/30/06 11:09 PM
Delete
Blogger கானா பிரபா said...

வித்தியாசமான சிந்தனை, உச்சக்கட்டம் என்ற படம் மனநோயாளர் விடுதியில் சில காட்சிகள் எடுக்கப்பட்ட பரபரப்பான படம்.
தமிழ்ப்படங்களில் கதாநாயகனைச் சாகடிக்க ஒரே வழி இப்படியான புது வியாதிகள்.

வடக்கும் நாதன் பற்றி என் பதிவு இதோ, வாசித்திருக்கிறீர்களா?

http://kanapraba.blogspot.com/2006/10/blog-post_29.html

1/2/07 1:14 AM
Delete
Blogger செல்லி said...

பிபா
வடக்கும்நாதன் பற்றிய உங்கள் பதிவைப் பார்த்தேன்.நன்றாக இருக்கிறது.
வியாதிக் கதைகளை வைத்து படம் எடுப்பதால் திடீர் திருப்பங்கள் பார்ப்பவர்களை தொடர்ந்து பார்க்கதூன்டும் என்றுஎண்ணுகிறார்கள் போலும்.
தனக்கிருக்கும் நோயை கதாநாயகன் இன்ங்கண்டு அதிலிருந்து எப்படி தன்னை விடுவித்துக்கொள்கிறான் என்பதாக இருந்தால்த்தான் மக்களுக்கு பயன்படும். உதாரணத்துக்கு A Beautiful Mind.
நன்றி

1/2/07 2:34 PM
Delete
Blogger செல்லி said...

மன்னிக்கவும் பிரபாவில் ர எழுதப்படவில்லை.

1/2/07 2:36 PM
Delete
Blogger Bharateeyamodernprince said...

அருமையான பதிவு.
கேன்ஸரை விட்டுத்தள்ளுங்கள். மற்றபடி சட்டென்று எனது நியாபகத்திற்கு வரும் படங்கள் - 'கீழ் வானம் சிவக்கும்' சரிதாவிற்கு `லிம்போசோகோமா' என்ற வியாதி இருக்கும். 'அக்னி சாட்சி' படத்தில் வரும் சரிதாவிற்கு ஒருவித `மெண்டல்' பிரச்சினை உண்டு.

'வடக்கும் நாதன்' பற்றியகானா பிரபாவின் blogஐ வாசித்தேன். பிரபாவிற்கு நன்றி!

1/3/07 7:20 PM
Delete
Blogger செல்லி said...

வணக்கம் பாரதீயமொடேண்பிரின்ஸ்
உங்க வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் வருக!

1/3/07 8:15 PM
Delete

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

இது ஒரு ராகமாலிகை. M.S. சுப்புலக்ஷ்மி பாடிய பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

மும்பாய் சகோதரிகள் பாடியபாடல் இங்கே கேட்கலாம்


ராகம்: சிறீரஞ்சனி

தாளம்: ஆதி
இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்: M.S. சுப்புலக்ஷ்மி

பல்லவி

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

குறையொன்றுமில்லை கண்ணா

குறையொன்றுமில்லை கோவிந்தா

அனுபல்லவி

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாலும் எனக்கு

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம் 1

வேண்டியதைத் தந்திட வேங்கடேசம் என்றிருக்க

வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம் காபி

சரணம் 2

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா - கண்ணா

உன்னை மறையோதும் ஞானியர் மட்டுமே காண்பார் என்றாலும்

குறையொன்று;ம் எனக்கில்லை மறைமூர்த்தி கண்ணா என்றாலும்

குறையொன்றும் எனக்கிpல்லை மறைமூர்த்தி கண்ணா

குன்றின்மேல் கல்லாகி நிற்கின்றாய வரதா

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

ராகம்: சிந்துபைரவி

சரணம்4

கலிநாளுக் கிரங்கி கல்லிலே இரங்கி

நிலையாக கோயிலில் நிற்கின்றாய் கேசவா

குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா

சரணம்5

யாரும் மறுக்காத மலையப்பா

உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணை கடலன்னை

என்றும் இருந்திட ஏது குறை எனக்கு

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

ஒன்றும் குறை இல்லை மறைமூர்த்தி கண்ணா

மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

கோவிந்தா கோவிந்தா




7 Comments - Show Original Post Collapse comments

Blogger செல்லி said...

இப்பாடலை இயற்றியவர்: ராஜாஜி
பாடியவர்:M.S.சுப்புலக்ஷ்மி

12/28/06 4:03 AM
Delete
Blogger செல்லி said...

மன்னிக்கவும், சொடுக்கவும் என்ற சொல் சொடுக்கவ என்பதுடன் நின்றுவிட்டது.

12/28/06 4:06 AM
Delete
Blogger நான் said...

செல்லி,

எனக்கு மிகவும் பிடித்த பாடல். தினமும் ஒரு முறை கேட்கிறேன்.

அது என்னங்க செல்லி, பெயர்க்காரணம் என்ன?

12/30/06 1:10 AM
Delete
Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

அந்தந்த பகுதிகளுக்கு அந்தந்த ராகங்களின் பெயரையும் போட்டு அருமையாக இட்டுள்ளீர்கள் செல்லி!
வாழ்த்துக்கள்!

நீங்கள் அடியேனை அனுமதித்தால்,
கலிணாலுக்கு = கலிநாளுக்கு
வேங்கடேசன் என்றிருக்க = வேங்கடேசம் நின்றிருக்க

12/30/06 9:26 PM
Delete
Blogger செல்லி said...

//கலிணாலுக்கு = கலிநாளுக்கு
வேங்கடேசன் என்றிருக்க = வேங்கடேசம் நின்றிருக்க//
இது சரியா? என்ற சந்தேகமிருந்தது ஆனா சரியான சொல் எது என்று தெரியாத்தால் அப்படியே விட்டுவிட்டேன். பிழைகள் திருத்தியமைக்கு மிக்க நன்றி.

12/30/06 11:17 PM
Delete
Blogger செல்லி said...

நான்
வருகைக்கு நன்றி.
ஏற்கனவே சொன்னமாதிரி "செல்லி"அம்மாவோட செல்லப் பேருங்க.

12/31/06 10:13 PM
Delete
Blogger Chandravathanaa said...

கேட்டதும் பிடித்து விட்ட பாடல்களில் ஒன்று.
நன்றி.

10/23/08 9:45 PM

கந்த சஷ்டி - யாழ் அனுபவம்

கந்த சஷ்டி விரதம் தமிழகத்தில் 30.10.08 முதல் 4.11.08 வரை அனுட்டிக்கப்படுகிறது. ஆனா இங்கு 29.10.08 ஆரம்பமாகிறது என்கிறார்கள்.
மூன்று சக்திகட்கு ஒரு நவராத்திரி போல,சிவனுக்கு ஒரு சிவராத்திரி போல, கந்தனுக்கு உகந்த விரதம் கந்த சஷ்டி. இது ஆறுநாட்கள் விரதம் இருப்பதாகும்.சகல பாவங்களையும் போக்கும் விரதம் எண்டு எங்களூரில் சொல்லுவினம்.ஐப்பசி மாதத்தில் தீபாவளி முடிந்து அமாவாசைக்கு அடுத்தநாள், பிரதமை திதி முதல் சஷ்டிதிதிவரை இந்த விரதம் இருப்பினம்.அநேகமாய் யாழ்ப்பாணத்தில் எல்லா முருகன் கோயில்களிலும் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.

இது 2005 இல் கோயில் கோபுர அழகுடனான தோற்றம்.

சுழிபுரம் பறாளாய் முருகமூர்த்தி கோயிலில் இந்த ஆருநாளும் முருகனுக்கு விசேடபூசைகள் இடம்பெறும். ஆறாம் நாள் சூரன்போர் நடைபெறும்.ஆறு தினங்களும் இரவில் சிலர் மிளகும் தண்ணீரும் என உபவாசமிருப்பவர்கள், சிலர் பாலும் பழமும் மட்டுமே உட்கொண்டு விரதமிருப்பவர்கள். வயதானவர் பயறு அவித்துச் சாப்பிடுவர். அதற்கும் இயலாதவர் ஒரு வேளை சோறு உண்பர்.அப்போ அங்கு மழைக்காலம் என்பதால் தண்ணீரும் அருந்தாமல் விரதம் இருந்தா நா வறண்டு போகாது. காற்றிலும் ஈரப்பதன் இருக்கும்.ஆனா இங்கு பிறிஸ்பேனில் கடும் வெயில் தொடங்கிவிட்டது.நீரும் அருந்தாமல் விரதமிருப்பது உண்மையிலேயே ஒரு கடுந் தவம்தான்.


பறாளாய்க் கோயிலில் முருகனடியார்கள் சிலர் வீட்டில் மச்ச மாமிசம் உண்பரால் துப்பரவு இருக்காது எண்டு கந்தர்சஷ்டி கவசம் பாடியபடி கோயிலியே ஆறு நாளும் தங்கி இருந்து விரதம் பிடிப்பர்.

இருப்பினும், ஊர் ஞாபங்கள் வரும்போது கண்களும் குளமாகும்.1997 குண்டு, செல் அடிபாடுகளால் இப்படியாக இந்தக் கோயில் கோயில் தேர் இருந்தன.

தமிழருக்கு ஒரு விடிவு கிடைக்க தமிழ்க் கடவுள் முருகனை மண்டாடுவம். அதற்காக சஷ்டி கவசம் பாடி ஆறு நாளும் முருகனை வேண்டி வழிபடுவோம்.

இன்று சன்னதி முருகனுக்கு தேர்த் திருவிழா




பழைய ஞாபகங்கள் வரும்போது கவலையாயிருக்கிறது. முன்பு சன்னதி முருகனை தேரில் தந்த காட்சியைப் பாத்து கண்ணீர்மலக வழிபட்டேன். இன்று அங்கு போகவும் முடியாமல் படங்களைப் பாக்க கண்ணீர் வருகிறது.
நல்லூரில் தங்க வடிவில் வடிவேலன் சன்னதியில் வெள்ளி வடிவேலன்.படம் நன்றி: நல்லூர்க்கந்தன்

என்னைப் போல் உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் உன் அடியவர்க்கும் எம் தாயகத்தவருக்கும் சன்னதி வேலவா நீதான் அருள் புரிய வேண்டும்!

"பயந்த தனி வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே"
"சன்னதி வேலனுக்கு அரோகரா" இன்னமும் காதில் கேட்கிறது.
எங்கள் தாயகத்தில் பழம்பெரும் கோயில்களில் ஒன்றான சன்னதி ஆலயத்தைப் பற்றி சகவிடயங்களயும் அறிய கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்
சன்னதி வேலன்

நான் எழுதியவைகளில் எனக்குப் பிடித்தவை ---அரைபிளேடின் அழைப்பிற்கிணங்க

எனக்கு இப்படி எழுத ஒரு வாய்ப்பைத் தந்த அரைபிளேடு அவர்களுக்கு முதலில் ஒரு கோடி வணக்கங்கள்!

நன்றாக எழுதிக் கொண்டிருக்கும் ஏனைய நண்பர்களைப்போல நான் எதுவும் பெரிசா எழுதியிருக்கிறேனா என்றால் என்னைப் பொறுத்தவரை இல்லை என்றுதான் சொல்லுவேன்.
இருந்தாலும், நான் அதிக நேரமெடுத்து ஆராய்ந்து எழுதியது முருங்கை பற்றிய பதிவுதான்.

அடுத்ததாக, ஒருவனுக்கு மேலான பதவியோ அல்லது எல்லாரையும் விட மேலான அதிகாரமோ வந்து விடுகிறது என்று வத்துக் கொள்ளுங்கள். அவனைச் சுற்றிச் சிலர் ஈ போல மொய்த்துக் கொண்டு திரிவர்.திரிந்தாலும் பரவாயில்ல, பிறகு தனக்கு கீழுள்ளவனை அல்லது பிடிக்காதவனுக்கு தான் இன்னாருடை ஆள் தெரியுமா எண்டு காட்டுற திமிர் இருக்கே அப்பப்பா பொறுக்கவே முடியாது. அப்பெல்லாம் சிவன்ர கழுத்தில இருக்கிற பாம்பு கருடனைப் பாத்து நக்கலா "எப்பிடிச் சுகம்?" எண்டு கேக்கிறதான் ஞாபகத்துக்கு வரும்.அவங்க காட்டில மழைபெய்யுது, அந்த மழை நமக்கும் வராமலா போகப் போகுது எண்டிட்டு இருக்கவேண்டியதான். இங்கு நான் வாழும் சமூகத்தில் ஏற்பட்ட சொந்த அனுபவத்தில வந்ததுதான் இந்தப் பதிவு



மேலும் எனக்குப் பிடித்த இலக்கிய பதிவுகள் எல்லாம் என் தாயின் நினைவாக எழுதப்பட்டவை.அத்தனை ஔவையின் பாடல்களும் சின்ன வயதில் அம்மாவிடம் கற்றுக் கொண்டதால் அவற்றை அனுபவித்து ரசித்து எழுதினேன். அதில் மிகவும் பிடித்தது இது!



அவுஸ்திரேலியாவில் எனக்கு மிகவும் பிடித்தமான விலங்கு பற்றியும் ஒரு பதிவு .என் சின்னஞ்சிறு மாணவர்க்கும் இந்த விலங்கு நன்றாகப் பிடிக்கும் என்பதாலும், தமிழில் எழுதி பதிவாகப் போட்டால் எல்லாருக்கும் பிடிக்குமே என்ற எண்ணத்திலும் இதை எழுதினேன். பலருக்கு உண்மையில் இந்த விலங்கு பற்றிய தகவல்கள் புதிதாக இருந்ததால் அதை எழுதியதற்கு பாராட்டியிருந்தனர். அத்தனை பேருக்கும் நன்றி.


அரைபிளேடுக்கும் எனக்குஅழைப்பு விடுத்ததிற்கு நன்றி